states

img

நாட்னா கூட்டுறவு வேளாண் வளர்ச்சி குழு தேர்தல் - இடதுசாரி வேட்பாளர்கள் வெற்றி!

மேற்கு வங்கத்தில் நாட்னா கூட்டுறவு வேளாண் வளர்ச்சி குழுவின் பிரதிநிதி தேர்தலில் போட்டியிட்ட 50 இடங்களில் 44 இடங்களில் இடதுசாரி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

மேற்கு வங்கத்தில் நாட்னா கூட்டுறவு வேளாண் வளர்ச்சி குழு கடந்த 1960 முதல் 2021 வரை இடதுசாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன்பிறகு, இடதுசாரிகள் வாரியத்தை கலைத்துவிட்டு தேர்தலை நடத்தாமலேயே தற்காலிக குழு ஒன்றை திரிணாமுல் காங்கிரஸ் அரசு அமைத்தது. இதை தொடர்ந்து இடதுசாரிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், குழுவை கலைத்து தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஞாயிறன்று நாட்னா கூட்டுறவு வேளாண் வளர்ச்சி குழுவின் பிரதிநிதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 1241 பேர் வாக்களித்தனர். தேர்தலில் 50 இடங்களில் போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளர்கள் 44 இடங்களில் வெற்றி பெற்றனர். திரிணாமுல் கட்சிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன. சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.